இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பார்வையாளர்களால் தொற்று பரவாமல் தடுக்க டிவி திரையில் குழந்தையை காண்பிக்கும் திட்டம் : ஜி.ஹெச்.களில் விரைவில் அறிமுகம்

11/27/2014 5:00:01 PM
காஷ்மீர், ஜார்கண்டில் நாளை 3ம் கட்ட தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு

நாமக்கல்: பார்வையாளர்களால் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், டி.வி. திரையில் குழந்தையை காண்பிக்கும் திட்டம் முதற்கட்டமாக சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.சேலம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் உயிரிழப்பு அதிகரித்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிசு மரணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் சேலம், தர்மபுரி மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை டாக்டர் சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:

அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பு பயிற்சிக்கு பின்னரே பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகளை பராமரிக்க முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே கவனத்துடன் பாதுகாக்க முடியும். தரம் வாய்ந்த உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பல கர்ப்பிணிகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இங்குள்ள பயிற்சி பெற்ற டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் தாய், சேய் இருவரும் காப்பாற்றப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது, எடைகுறைவு, மூச்சு திணறல் உள்ளிட்ட குறிப்பிட்ட தன்மைகளால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திற்கும் அந்தந்த அரசு மருத்துவமனையிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தால் மட்டுமே மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படும் குழந்தைகளை பார்வையிட வரும் உறவினர்களால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் டி.வி. திரையில் குழந்தையை காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக மற்ற மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படும். இவ்வாறு டாக்டர் சீனிவாசன் கூறினார்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்



  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி



  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி



  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி



  • சிறுவாபுரி மேம்பாலத்தில் விபத்து : லாரியின் மீது கார் மோதல் : அடகு கடைக்காரர், டிரைவர் பலி



  • டிவி பார்க்க தந்தை தடுத்ததால் காலில் கல்லை கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து வாலிபர் சாவு



  • கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு



  • முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு



  • 4 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு : பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்



  • அம்பத்தூர் 82வது வார்டில் சாலையை சீரமைக்கக் கோரி தேமுதிக இன்று திடீர் மறியல்



Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription