'மறைந்த நடிகர் ஜெயனின் மனைவி நான்தான்' 34 ஆண்டுகள் கழித்து உரிமை கொண்டாடும் பெண்: கேரளாவில் பரபரப்பு
11/21/2014 2:30:22 PM
திருவனந்தபுரம்: 34 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் பலியான நடிகர் ஜெயனின் மனைவி நான்தான் என்று உரிமை கொண்டாடும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மலையாள நடிகர் ஜெயன். கடந்த 1980ம் ஆண்டு ‘கொலிலாக்கம்' என்ற மலையாள படத்தில் நடித்து வந்தார். சென்னை அடுத்த சோழவரம் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஜெயன் சண்டை காட்சியில் நடித்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது பெண் ஒருவர் நான்தான் ஜெயனின் மனைவி என்று உரிமை கொண்டாடுகிறார். அவரது பெயர் ஜெயா மேத்யூ. மலையாள இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஜெயனும் நானும் சட்டபூர்வமாக திருமணம் செய்துகொள்ளாவிட்டாலும் கணவன் மனைவிபோல் பழகி வந்தோம். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். படப்பிடிப்பின்போது அவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அதனால் எங்களுடைய விவரத்தை அப்போது வெளியிட முடியவில்லை' என்றார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.