துபாய் டெஸ்ட் போட்டி: டெய்லர் அபார ஆட்டம் நியூசி 177 ரன் முன்னிலை
11/21/2014 2:25:09 PM
துபாய்: துபாய் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 177 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 403 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன் கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை பாகிஸ் தான் நேற்று தொடர்ந்தது. 28 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்த விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமது சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்கள் எடுத்து மெக்குல் லம் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி 393 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் துவக்கிய நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். யாசிர் ஷா, ஜூல்பிகர் பாபர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பிரெண்டன் மெக்குல் லம் 45 ரன்கள் எடுத்து பாபர் பவுலிங்கில் வெளி யேறினார். வில்லியம்சன் 11 ரன்கள், லேதம் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.ஒரு முனையில் ராஸ் டெய்லர் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்த்தவாறு இருந்தது. 4ம் நாள் ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக் கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ் டெய்லர் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள் ளார். நியூசிலாந்து அணி 177 ரன்கள் முன் னிலை பெற்றுள்ள நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. மீத முள்ள 4 விக்கெட்டுகளை யும் விரைவில் வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.