சிபிஎஸ்இ பள்ளிகளில் மீண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வு?
11/21/2014 2:16:41 PM
புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய அரசின் மேல்நிலை கல்வி வாரியத்தின்கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புவரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சராக இருந்த கபில்சிபல் ரத்து செய்தார். விருப்பப்படுகிறவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மீண்டும் 10ம் வகுப்பு பொது தேர்வை கொண்டு வருவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய மேல்நிலை கல்வி வாரிய குழுவினருடன் அடுத்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.