கார்ல்சனை வீழ்த்த ஆனந்த் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும் : மகளிர் மாஜி சாம்பியன் கருத்து
11/20/2014 2:13:04 PM
சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் வேளையில் கார்ல்சனை வீழ்த்த ஆனந்த் சில ஆபத்து மிகுந்த முடிவு களை போட்டியில் விரைந்து எடுக்க வேண்டு மென செஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.12 சுற்று ஆட்டங்களாக ரஷ்யாவில் சோச்சி நகரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 8வது சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் நார்வே வீரர் கார்ல்சன் 4.5 புள்ளிகளும், இந்தியாவின் ஆனந்த் 3.5 புள்ளிகளும் பெற்றுள்ள னர். 6.5 புள்ளிகளை முதலா வதாக எட்டும் வீரர் புதிய உலக சாம்பியனாகத் தேர்வு பெறுவார்.செஸ் விளையாட்டு பிறந்த நாடாக கருதப்படும் இந்தியாவுக்கு மீண்டும் உலக சாம்பியனாக ஆனந்த் திரும்ப வேண்டுமென்றால், அவருக்கு தொடர் வெற்றி கள் தேவைப்படுகிறது. கார்ல்சன் எடுத்துள்ள புள்ளிகளைச் சமன் செய்வது டன், கூடுதல் புள்ளிகளைப் பெறுவது இப்போதுள்ள சூழ்நிலையில் கடினமான இலக்காகத் தோன்றினாலும், ஆனந்துக்கு இது முடியாத காரியமில்லை என்கின்றனர் செஸ் நிபுணர்கள்.
‘‘அடுத்த நான்கு போட்டிகளில் ஆட்டத்தை தனக்கு சாதகமான நிலைக்கு ஆனந்த் கொண்டு சென் றால், அவருக்கு மீண்டு வருவதற்கு சிறிது வாய்ப்புள் ளது. இப்போது நடை பெற்று வரும் போட்டி உற்சாகமூட்டுவதாக உள் ளது. ஆனந்த் தனது பாணி ஆட் டத்தை ஆடும் போது அவ ரால் சிறப்பாக விளையாட முடிகிறது. ஆனால், மேக் னஸ் கார்ல்சனுக்கு சாத க மான அம்சங் களை வழங்கிவிடும் போது ஆனந்த் சிக் கலுக்குள் சிக்கிவிடுகிறார்.வெள்ளைக்காய்களு டன் இனி விளையாட உள்ள 2 ஆட்டங்களிலும் ஆனந்த் கூடுதல் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கருப்பு காய்களுடன் விளையாடும் ஆட்டங்களை அவர் டிரா செய்ய வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபடுவது போன்றோ, ஆபத்தான முறையில் ஆடி அனைத்தையும் இழப்பது போன்றோ அவர் விளை யாட மாட் டார் என்றாலும், இத்ததைய ஆட்டம் இப்போதைக்கு தேவைப்படுகிறது. அவர் ஒரு போட்டி யில் தோற் றாலும் அடிப்படையில் அனைத் தும் முடிந்துவிடும்,’’ என்று நான்கு முறை மகளிர் உலக சாம் பி யன் பட்டம் வென்றவரான சூசன் போல்கர் கூறியுள்ளார்.
உலக தர வரிசையில் 26ம் இடம் வகிப்பவரான இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணன் கூறுகை யில், ‘‘கார்ல்சன் ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளார். இன்னும் நான்கு ஆட்டங்கள் மட்டுமே விளையாட வேண்டியுள் ளது. கடைசி இரண்டு போட்டிகளும் கார்ல்சனு க்கு சாதகமா கவே இருந்துள் ளன. இரண்டு ஆட்டங்களிலும் கார்ல்சனின் துவக் கம் நன் றாக அமைந் தது. எட்டாவது ஆட்ட்த் தில் கருப்பு காய்களுடன் ஆனந்துக்கு சம மான ஆட் டத்தை வெளிப்படுத்தி னார். ஏழா வது ஆட்டத்தில் வெற்றி பெற அவ ருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனந்த்தைப் பொருத்தவரை வெள்ளைக்காய்களுடன் விளையாட உள்ள 10வது ஆட்டத்தில் வெற்றி பெற அவர் சில ரிஸ்க்கான முடிவுகளை எடுக்க வேண் டும். அவர் நிலையான ஆட்டத்தை ஆட வேண் டும். இந்த நிலையில் கார்ல் சன் ஆபத்து மிகுந்த முடிவு களை எடுக்க வேண் டும் என்று நான் கருதவில்லை,’’ என்றார்.