2011
30
Apr
லகு தரிசனத்துக்கு அனூமதி கிடையாது


திருமலை: செவ்வாய், புதன் கிழமைகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் வந்தால் லகு தரிசனம் நிறுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செவ்வாய், புதன் கிழமைகளில் லகு தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில், லகு தரிசனத்தை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமலையில் தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், கிருஷ்ணா ராவ் கூறியதாவது:

ஏழுமலையான் கோயிலில் செவ்வாய், புதன் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் லகு தரிசனம் மூலம் சுவாமியை அருகே சென்று தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 50 ஆயிரம் பக்தர்கள் வந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இனி செவ்வாய், புதன் கிழமைகளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்தால் லகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். 50 ஆயிரத்துக்கு மேல்  பக்தர்கள் வந்தால் லகு தரிசனம் நிறுத்தப்படும்.  இவ்வாறு கிருஷ்ணா ராவ் கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me