கட்சி விவாதம் கைகலப்பில் முடிந்தது தேமுதிக & பாமகவினர் மோதல் 4 பேர் கைது
தர்மபுரி அருகே தேமுதிக, பாமகவினர் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தேமுதிகவை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சில நாட்களுக்கு முன் தேமுதிக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரமாண்ட டிஜிட்டல் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை அகற்றும் பணியில் தேமுதிகவினர் நேற்று ஈடுபட்டனர். கடத்தூர் அருகே உடசல்பட்டி பிரிவு சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களை தேமுதிக நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் பாமக பிரமுகர் சண்முகம் உள்பட சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 கட்சிகளின் தலைவர்களின் அரசியல் நிலைபாடு குறித்த பேச்சு எழுந்தது. 2 கட்சியினரும் மாறி, மாறி மற்றவர்களை விமர்சனம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேமுதிக மற்றும் பாமக நிர்வாகிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கடத்தூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மோதல் குறித்து 2 தரப்பினரும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சரவணன் உள்ளிட்ட 4 தேமுதிக பிரமுகர்களை கைது செய்தனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM