தாம்பரத்தில் நாய்கள் தொல்லை கண்டு கொள்ளாத நகராட்சி
தாம்பரம்:தாம்பரம் நகராட்சியில் தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் காலையில் நடைபயிற்சி செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகனங்களில் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நாய் பிடிக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் சரிவர ஈடுபடவில்லை. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என நகராட்சி விளம்பரப்படுத்தி உள்ளது. ஆனால் பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை இல்லை.
இதுபோல பன்றிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. சாலையில் தேங்கியுள்ள குப்பைகளை கிளறி விட்டு சுகாதார சீர் கேடுகளை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்லும் பொதுமக்களை மிரட்டுகிறது. இது குறித்து புகார் செய்தால் சுகாதார துறையினர் அலட்சியமாக பேசுகின்றனர். எனவே பன்றி, நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களிடம் அலட்சியமாக பேசும் சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அண்ணல் அம்பேத்கர் தலித் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM