சிறையில் ரவுடியை கொல்ல முயற்சி ஏனாமில் சிக்கிய 13 பேர் சிறையில் அடைப்பு
புதுச்சேரி:ஏனாம் சிறையில் ரவுடியை கொல்ல முயன்று பிடிபட்ட 13 பேர் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் புதுவை அழைத்து வரப்பட்டு காலாப்பட்டு சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.ஏனாம் சிறைக்குள் புகுந்து ரவுடி மர்டர் மணிகண்டனை தீர்த்து கட்ட சென்ற 13 பேர் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டு, பெட்ரோல் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜெகன் என்பவர் கொலைக்கு பழியாக மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து ஏனாம் இன்ஸ்பெக்டர் கபிலகுரு, சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், 13 பேரையும் நேற்று ஏனாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி அங்குள்ள தனி அறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி அவர்களை புதுவை சிறைக்கு உடனே மாற்ற சிறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு குறைபாடு, இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து உத்தரவு பெற்றனர்.
இதையடுத்து நேற்று மாலை 13 குற்றவாளிகளையும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்&இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் 14 துப்பாக்கி காவலர்கள், 2 வேன்களில் அழைத்து சென்றனர். இன்று அதிகாலை சென்னை வந்தடைந்த அவர்கள், காலை 10 மணியளவில் காலாப்பட்டு மத்திய சிறையை அடைத்தனர். பாதுகாப்பு கருதி வரும் வழியில் குற்றவாளிகளை 2 வேன்களில் மாற்றி மாற்றி போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 13 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மர்டர் மணிகண்டன் ஆதரவாளர்கள் ஏற்கனவே சிறையில் இருப்பதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படாதவாறு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM