ஆவடி: சென்னை மேற்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் அம்பத்தூரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹாஜி முகமது வரவேற்றார். மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொது செயலாளர் க.மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பிப். 12ல் அம்பத்தூர் அடுத்த வானகரத்தில் உள்ள வால்மார்ட் நிறுவனம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மற்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் ஆகியவற்றை எதிர்த்து மார்ச் 7ல் டெல்லியில் நடைபெறும் கண்டன பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வணிகர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில நிர்வாகிகள் சதக் அப்துல்லா, பாண்டியராஜன், வி.பி.மணி, ஆவடி ஐயாதுரை, முகமது செரீப், தங்கதுரை, வேலுசாமி, துரைராஜன், காசிராஜன், காவேரிமீரான், சேர்மக்கனி, கிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/6/2025 5:36:25 PM
-Updated 2/6/2025 5:24:45 PM
-Updated 2/6/2025 5:24:36 PM
-Updated 2/6/2025 5:24:16 PM
-Updated 2/6/2025 5:24:06 PM
-Updated 2/6/2025 5:23:56 PM
-Updated 2/6/2025 5:23:33 PM
-Updated 2/6/2025 2:56:02 PM
-Updated 2/6/2025 2:55:47 PM
-Updated 2/6/2025 2:47:10 PM
-Updated 2/5/2025 5:22:47 PM
-Updated 2/5/2025 5:22:38 PM
-Updated 2/5/2025 5:22:29 PM
-Updated 2/5/2025 4:50:12 PM
-Updated 2/5/2025 4:50:02 PM