மீனம்பாக்கம்: சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அதிலிருந்து இறங்கி வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற வாசுதேவன் (35) என்பவரது பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்தபோது, அவர், தாம்பரம் மகளிர் போலீசாரால் கடந்த 2008ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது.
குரோம்பேட்டையை சேர்ந்த அவரது மனைவி, வரதட்சணை புகார் கொடுத்தது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். சிங்கப்பூரில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை ஓர் அறையில் அடைத்து வைத்துவிட்டு, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாசுதேவனை கைது செய்து தாம்பரத்துக்கு அழைத்து சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/25/2012 4:02:38 PM
-Updated 10/25/2012 4:00:12 PM
-Updated 10/25/2012 3:59:57 PM
-Updated 10/25/2012 3:59:46 PM
-Updated 10/25/2012 3:59:34 PM
-Updated 10/25/2012 2:42:57 PM
-Updated 10/25/2012 2:42:44 PM
-Updated 10/25/2012 2:32:43 PM
-Updated 10/25/2012 2:32:31 PM
-Updated 10/25/2012 2:32:17 PM
-Updated 10/25/2012 2:18:21 PM
-Updated 10/25/2012 2:18:11 PM
-Updated 10/25/2012 2:18:02 PM
-Updated 10/25/2012 12:52:18 PM
-Updated 10/25/2012 12:51:34 PM