2012
24
Aug
கிறிஸ்தவ ஆலயம் இடிப்பு நாகர்கோவிலில் பதற்றம்


நாகர்கோவில்: கிறிஸ்தவ ஆலயம் திடீரென இடிக்கப்பட்டதால் நாகர்கோவிலில் பதற்றம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் 70 ஆண்டு பழமை வாய்ந்த புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த பங்கு நிர்வாகம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்னை உள்ளது. பழையான ஆலயத்தை இடித்து புதியதாக கட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஆலயத்தின் தென்புற பகுதியை இடித்தனர். இதில் ஆலயத்தின் ஒருபகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு எதிர்தரப்பினர் பெருமளவில் திரண்டனர். ஆலயத்தை இடிக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. தகவலறிந்த டிஎஸ்பி ரத்தினவேல் மற்றும் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,