பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய ஆசிட்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டேங்கர் லாரிகள் மோதிய விபத்தில் ரோட்டில் ஆசிட் கொட்டி ஆறுபோல் ஓடியது. தூத்துக்குடியிலிருந்து புதுச்சேரிக்கு சல்ப்யூரிக் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று சென்றது. அதேபோல் கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் நால்ரோடு அருகே சென்றபோது சல்ப்யூரிக் ஆசிட் ஏற்றி சென்ற லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்து, அதில் இருந்த ஆசிட் ரோட்டில் கொட்டி ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதுபற்றி சேலம் மாவட்டம் வெல்லங்குண்டத்தை சேர்ந்த ஆசிட் ஏற்றிய லாரி டிரைவர் கிருஷ்ணன் புகார் செய்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2012 6:16:13 PM
-Updated 5/31/2012 6:12:33 PM
-Updated 5/31/2012 5:52:20 PM
-Updated 5/31/2012 4:02:22 PM
-Updated 5/31/2012 3:51:37 PM
-Updated 5/31/2012 3:51:11 PM
-Updated 5/31/2012 3:50:49 PM
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM