|
|||||
|
2011
12
Jan ஆலந்தூர், - உள்ளகரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில், உள்ளகரம்& புழுதிவாக்கம் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடன் வழங்கும் விழா உள்ளகரத்தில் நேற்று நடந்தது. வங்கியின் முது நிலை மேலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். முதன்மை மேலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். மண்டல முதன்மை மேலாளர் ஸ்ரீராம், 48 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 1 கோடியே 8 லட்சத்து 900 ரூபாய்க்கான காசோலை களை வழங்கினார். விழாவில் கவுன்சிலர் சரஸ்வதி, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த லதா ராகவன், சாந்தி மற்றும் கார்த்திகேயன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|
|
-Updated 1/12/2025 4:00:58 PM
-Updated 1/12/2025 2:33:59 PM
-Updated 1/12/2025 2:33:43 PM
-Updated 1/12/2025 2:33:30 PM
-Updated 1/12/2025 2:33:04 PM
-Updated 1/6/2025 4:56:26 PM
-Updated 1/6/2025 4:55:49 PM