மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா, ரிபாஹி, ஹைதர் அலி, ரஹமத்துல்லா ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அப்போது பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது : மனித நேய மக்கள் கட்சி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெற்று போட்டியிட விருப்பம் தெரிவித்தோம்.
நீண்ட கால அடிப்படையில், மத சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் இந்த கூட்டணிக்கு வந்துள்ளோம். தமிழக மக்களின் மனநிலை இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய இருக்கிறது. இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். புதிய ஆட்சி மலரும். எத்தனை தொகுதி என்று பேசினீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அது தொடர்பாக தொகுதி உடன்பாட்டு குழுவுடன் பேசி எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்படும்’’ என்றார். இந்த கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற கேள்விக்கு ‘‘அழைப்பது எங்கள் கடமை. ஏற்பது அவர்களது விருப்பம்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.