நடிகர்களின் உடைகளை ஏலம் விடுகிறார் சமந்தா
9/21/2016 3:07:17 PM
சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்காமல் குழப்ப நிலை நீடிக்கிறது. இந்து வைதீக முறைப்படி திருமணம் செய்ய சைதன்யா குடும்பத்தினர் தரப்பில் கூற கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று சமந்தா கூறி வருகிறார். இந்த திருமண சிக்கலுக்கு முடிவுகாண ஆலோசனை நடந்து வருகிறது. இந்த குழப்பத்தில் நடிப்பை தொடர்வதா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போடுவதா? என்றும் மதில்மேல் பூனையாக முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார் சமந்தா.
இதற்கிடையில் பிரத்யூஷா அமைப்பின் மூலம் ஆதரவற்ற, மாற்று திறனாளிக்கு உதவி வருகிறார். நடிப்பு நற்பணி என இரண்டும் மாறி மாறி செய்து வந்தவர் தற்போது நடிப்பை சிறிது தள்ளிவைத்து விட்டு நற்பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது உதவிப் பணியை மேலும் விரிவுபடுத்தி தோல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட மேலும் சில கூடுதல் பணிகளை இணைத்துக்கொண்டிருக்கிறார். நற்பணிக்காக தனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ெதாகையை ெசலவிட்டு வந்தவர் கூடுதல் தேவைக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். பிரபல நட்சத்திரங்கள் அணிந்து நடித்த காஸ்டியூம்களை ஏலம் விடவும் அதன் மூலம் திரட்டப்படும் நிதியை நற்பணிகளுக்கு பயன்படுத்தவும் உள்ளதாக இணைய தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.