மூணாறு மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்தது - செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் படுகாயம்
9/21/2016 2:41:51 PM
செங்கல்பட்டு, -மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சில் நேற்று சுற்றுலா சென்றனர். மூணாறு அருகே மலைச்சரிவில் பஸ் சென்றபோது திடீரென பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கிய மாணவ, மாணவிகள் கூச்சல் போட்டனர். அவ்வழியாக சென்றவர்கள், அவர்களுக்கு உதவி செய்தனர். இதில் 12 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்அறிந்து வந்த மூணாறு போலீசார், காயம் அடைந்த மாணவர்களை மீட்டு மூணாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதுசம்பந்தமாக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி டீன் குணசேகரன் கூறுகையில், “மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.