விட்டலாச்சாரியா பாணி கதையில் குஷ்பு தம்பி
9/20/2016 3:13:11 PM
விட்டலாச்சாரியா பாணி படங்கள் மறந்தே போய்விட்டது. அதை ஞாபகப்படுத்தும் விதமாக உருவாகிறது மாய மோகினி. இது பற்றி இயக்குனர் ராசாவிக்ரம் கூறியது:வந்தவாசி அருகே அதியனூர் பகுதிக்கு தயாரிப்பாளர் தங்கவேலுவை சந்திக்க சென்றேன். அவரிடம் மாய மோகினி பட கதையை கூறினேன். அதைக்கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தவர், ‘இது என் வாழ்வில் நடந்த சம்பவமாயிற்றே...’ என்றார். அவர் வாலிப வயதிலிருக்கும்போது ஒரு மோகினி அவரை 3 வருடம் ஆட்டிப்படைத்ததாகவும், குடும்பத்தினர் அவரை கோயிலில் வைத்து காப்பாற்றி திருமணம்செய்து வைத்தபிறகே அதிலிருந்து மீண்டதாகவும் கூறினார். படத்திலும் முன்ஜென்மத்தில் காதல் கைகூடாமல் இறந்த ஒரு பெண் மோகினியாக மாறி அடுத்த ஜென்மத்தில் வரும் அந்த காதலனை எப்படி அடைய முயல்கிறார் என்பது கதை. அப்துல்லா ஹீரோ. இவர் நடிகை குஷ்பு தம்பி. ஜோதிஷா, சாரிகா, கே.ஆர்.விஜயா, இமான் அண்ணாச்சி, பூவிலங்கு மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.ராஜன் ஒளிப்பதிவு. எம்.ஜெயராஜ் இசை. திருவண்ணாமலை, வேட்டவலம் ஜமீன், காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.இவ்வாறு இயக்குனர் கூறினார்.