உருகுவேவுக்கு எதிராக கோல் - சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார் மெஸ்ஸி
9/2/2025 4:51:44 PM
மென்டோஸா: ஜுன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் பைனலில், சிலி அணிக்கு எதிராக அடைந்த அதிர்ச்சி தோல்வியால், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பார்சிலோனா எப்சியின் சூப்பர் ஸ்டாரான மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என அர்ஜென்டினாவில் கோரிக்கைகள் வலுத்தது. இதனிடையே 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகளில் விளையாடுவதாக மெஸ்ஸி அறிவித்தார். இதன்படி அர்ஜென்டினாவில் உள்ள மென்டோஸா நகரில் இன்று அதிகாலை நடந்த, உருகுவே அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில், மெஸ்ஸி களம் இறங்கினார். இந்த போட்டியின் 43வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார். முன்னதாக போலோ டைபாலா ரெட் கார்டு பெற்று வெளியேறியதால், 2வது பாதி முழுவதும் அர்ஜென்டினா 10 வீரர்களுடன் விளையாடியது. ஆனாலும் உருகுவே அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இந்த ெவற்றியின் மூலம் தென் அமெரிக்க தகுதி பிரிவில், அர்ஜென்டினா முதலிடத்துக்கு
முன்னேறியது.