தலையில் அடிபட்டு காவலாளி பலி
7/29/2016 5:07:23 PM
ஆவடி, -அம்பத்தூர், இந்திரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். நேற்றிரவு பணியில் இருந்தபோது நள்ளிரவில் அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பவில்லை. சக காவலாளி பாத்ரூமுக்கு சென்று பார்த்தார்.அங்கு ரமேஷ் தலையில் அடிபட்டு ரத்த காயத்துடன் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலாளியை யாராவது அடித்து கொன்றார்களா என்று விசாரிக்கின்றனர்.