இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நாளை இறுதி சடங்கு முகமது அலி சொந்த ஊரில் ரசிகர்கள் குவிந்தனர் 1 மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

6/9/2025 2:38:25 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

லூயிஸ்வில்லி: மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த முகமது அலியின் இறுதி சடங்கு, கென்டகி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரானா லூயிஸ்வில்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் லூயிஸ்வில்லியில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள கேஎப்சி சென்டரில், பொது மக்களின் அஞ்சலிக்காக முகமது அலியின் உடல் நாளை வைக்கப்படுகிறது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில், இறுதி நிகழ்ச்சியாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பெற நேற்று கேஎப்சி சென்டரில் ரசிகர்கள் குவிந்தனர். 1 மணி நேரம் 10 நிமிடங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் தீர்ந்து போயின.

டிக்கெட் வாங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த ஜார்ஜ் நீல்சன் கூறுகையில், அதிகாலை 5 மணியில் இருந்து காத்திருக்கிறேன். ஆனால் இந்த காத்திருப்பில் அர்த்தம் உள்ளது. முகமது அலி என்னுடைய ரோல் மாடல். அவர் எனது ஹீரோ என்றார். டெக்சாசில் இருந்து வந்திருந்த பாப் ஆண்ட்ரிடா கூறுகையில், முகமது அலி உயிருடன் இருக்கும்போது, அவரை நான் சந்தித்தது இல்லை. அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனிடையே முகமது அலி இறுதி சடங்கில், வீடியோ கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு பிராணிகளை அழைத்து வரவும், செல்பி ஸ்டிக்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது அலியின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக, லூயிஸ்வில்லியில் ஐ யம் அலி என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். தனது 2 மகன்களுடன் இதில் கலந்து கொண்ட கிரேக் டேவிட்சன் கூறுகையில், முகமது அலியின் சண்டைகளை பார்த்துதான் நான் வளர்ந்தேன். வியட்நாம் போரின் போது, அவரது நிலைப்பாட்டை நான் தெரிந்து கொண்டேன். அவரை பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் சில
  • யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியது ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்



  • இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இலங்கை அணி பதிலடி



  • வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி உடல் அடக்கம்



  • யூரோ கோப்பை இன்று துவக்கம் ஜெர்மனி அணிக்கு விராட் கோஹ்லி ஆதரவு



  • கோபா அமெரிக்கா கால்பந்து உருகுவேக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது வெனிசுலா காலிறுதிக்கு முன்னேற்றம்



  • இலங்கையுடன் கடைசி டெஸ்ட் போர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 279/6



  • விம்பிள்டன் டென்னிஸ் ரபேல் நடால் விலகல்



  • பிரசாத், சந்துவும் விண்ணப்பம் இந்திய அணியின் பயிற்சியாளா் பதவிக்கு கடும் போட்டி ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு



  • கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் கோல் மழை கோடின்ஹோ ஹாட்ரிக்



  • உலக சாம்பியனை வீழ்த்தி அபாரம் 47 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]