100 வயதை எட்டிய தியாகி
6/3/2025 2:25:03 PM
சென்னை: திண்டிவனத்தை பூர்வீகமாக கொண்ட ஜெகதீச சர்மா என்ற சுதந்திர போராட்ட தியாகி, கொடுங்கையூரில் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இந்திய சுதந்திர போராட்டத்துக்காக, தமிழகத்தில் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு அறப்போராட்டங்களில் ஜெகதீச சர்மா கலந்து கொண்டார். மேலும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் தீவிர அபிமானம் கொண்டவர். அவர் இன்று 100 வயதை எட்டியுள்ளார். அவரது பிறந்த நாளை பாண்டுரங்கன் காலனி மக்களும் உறவினர்களும் நண்பர்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.