இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?

5/25/2016 5:00:50 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

கூடலூர்: பெரியாறு அணையை மத்திய குழு 27ம் தேதி ஆய்வு செய்வதால் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி.நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழு மற்றும் இக்குழுவிற்கு உதவியாக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ் கிரீஷ் தலைமையில் துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் 28, 29ல் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர். ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாளை மறுதினம் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த உள்ளனர். இதன்பிறகு குமுளியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என்று கேரளாவில் இடதுசாரி முன்னணியினர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எனவே துணைக்குழுவின் இந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தமிழக விவசாயிகள் கருதுகின்றனர். இதனிடையே பேபி அணையை பலப்படுத்தும் முயற்சியில் 22 மரங்களை வெட்ட தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த மரங்களில் தற்போது நம்பர் போடும் பணி துவங்கி உள்ளது. எனவே, பேபி அணை சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இைத பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் வரை தேக்கி வைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில
  • ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்



  • மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை



  • பறவை காய்ச்சல் எதிரொலி: கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு



  • பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு



  • ஜூன் 16ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேர் தயார்படுத்தும் பணிகள் ஜரூர்



  • கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டம் : சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு



  • விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி



  • அனைத்து வங்கிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி; விவசாயிகள் வேண்டுகோள்



  • ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்: 2ம் இடம் மாணவி சொல்கிறார்



  • சங்கரா பள்ளி மாணவி 2-ம் இடம்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]