திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு
5/21/2016 12:23:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில், மாவட்ட எஸ்பி சாம்சன், இன்று காலை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்த போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று அங்கிருந்த துப்பாக்கிகளை பார்வையிட்டார். பின்னர், நகர எல்லைக்குட்பட்ட ரவுடிகள், பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, டிஎஸ்பி, விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்ஐ இளங்கோ, தனிப்பிரிவு ஏட்டு சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.