பணத்தை தர மறுத்த தாசில்தார்
4/29/2016 2:13:32 PM
பூந்தமல்லி: ஆவணங்களை காண்பித்தபிறகும் பணத்தை உரியவரிடம் கொடுக்க தாசில்தார் மறுத்துவிட்டார்.ஆவடியை சேர்ந்தவர் ராமன் (32). இவர் ஆவடியில் உள்ள ஐடிசி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் மதுரவாயல் பகுதியில் பணத்தை வசூலித்து கொண்டு அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு பணம் வசூலித்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மதுரவாயல் தொகுதி பறக்கும்படை அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் ராமனிடம் இருந்த ரூ. 2.16 லட்சம் பணத்தை கைப்பற்றினர். பின் அவரை மதுரவாயல் தேர்தல் நடத்தும் அதிகாரி வீரப்பனிடம் அழைத்து சென்றனர். அவர் வேட்பு மனுக்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் மதுரவாயல் தாசில்தார் சீனிவாசனிடம் ராமனை ஒப்படைத்தனர்.ராமனிடம் பணத்துக்கான ஆவணங்களை தாசில்தார் கேட்டபோது ரசீதுகளை காண்பித்துள்ளார். அதற்கு தாசில்தார், ‘’ எந்தெந்த கடைகளில் பணத்தை வசூல் செய்தீர்களோ, அக்கடை உரிமையாளர்களை வர சொல்லுங்கள்’ என்றார். அவர்களை எப்படி நான் அழைத்து வரமுடியும் என ராமன் கூறியுள்ளார்.இதனால் ராமனிடம் இருந்து ரூ. 2.16 லட்சத்தை தாசில்தார் சீனிவாசன் பறிமுதல் செய்துவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை வாங்கி செல்லும்படி கூறி ராமனை அனுப்பிவைத்தார்.