வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தொண்டரை அடித்த விஜயகாந்த் : சேலத்தில் பரபரப்பு
4/20/2016 3:24:16 PM
சேலம்: தேமுதிக வேட்பாளர்கள் 104 பேர், மாவட்டச்செயலாளர்களுடன் சேலத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பத்திரிகையாளர், தொண்டர்களை அடிக்க விஜயகாந்த் கை ஓங்கினார்.தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி, தமாகவுடன் இணைந்து தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இன்று சேலத்தில் முகாமிட்டுள்ள விஜயகாந்த், தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 5 ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
கூட்டம் ஆரம்பித்தவுடன், தேர்தல் கண்காணிப்பு அலுவலர் சேகர், வீடியோகிராபர் ஒருவருடன் மணடத்திற்கு வந்தார். அவர்களை தேமுதிகவினர் தடுத்து நிறுத்தி உள்ளே விடாமல் வாக்குவாதம் செய்தனர். கட்சியின் தலைமை நிர்வாகிகள் உத்தரவின்படி அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதனிடையே இன்று காலை 11.35 மணிக்கு தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்திற்கு விஜயகாந்த் காரில் வந்து இறங்கியவுடன் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நோக்கி அடிக்க கையை ஓங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.இதன்பிறகு மண்டபத்தை நோக்கி நடந்த விஜயகாந்திடம் தனியார் தொலைகாட்சி நிருபர் பேட்டி எடுக்க மைக்கை நீட்டினார். இதை ஆக்ரோஷத்துடன் தட்டிவிட்டு சென்ற விஜயகாந்தை தொண்டர் ஒருவர் இடித்தபடியே பின்னால் வந்து கொண்டிருந்தார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயகாந்த், தொண்டரை அடித்து தள்ளி விட்டார்.
can i take xyzal in the morning
read can i take xyzal in the morning