இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு

3/23/2016 2:54:53 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

மீனம்பாக்கம்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்சில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம்  ஆகியவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து உயிரிழப்பு ஏற்பட்டது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும், இந்திய  விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் இணைந்து, நமது நாட்டில் அனைத்து விமான நிலையங்களையும் உஷார்படுத்தியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை  அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில் விமான நிலைய உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.  இதில் விமான பாதுகாப்பு, மத்திய தொழில் பாதுகாப்பு, விமான நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், மத்திய, மாநில உளவு பிரிவு  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு நேற்றிரவு 7 மணி முதல் 5 அடுக்கு  பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் வருகைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடினால் தீவிர விசாரணை  செய்யவும், உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும்  அனைத்து வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள் உடமைகளை தீவிர  சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வியாழக்கிழமை காலை வரை இந்த பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • 6 மாதமாக பென்சன் கிடைக்காமல் தவித்துவரும் மாற்றுத் திறனாளிகள்



  • பஸ்சில் சென்ற பெண் கடத்தல்?



  • மாநில நெடுஞ்சாலையில் கார்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்



  • உள்ளகரம், புழுதிவாக்கம் பூங்காவில் சமூக விரோத செயல்கள்



  • பால் விலை தொடர்ந்து உயர்வு : அதிமுக ஆட்சியின் காட்சிகள் மாறவில்லை : விஜயகாந்த் கண்டனம்



  • மதுரவாயல் சர்வீஸ் சாலையில் M1.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு



  • ஏர்போர்ட்டில் கடத்த முயன்ற ஆமைகள் பறிமுதல்



  • நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு - போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்



  • டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்



  • தீரன் சின்னமலை பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]