5 வருடமாக ரஜினி பற்றி புத்தகம் எழுதும் ஐஸ்வர்யா
3/23/2016 2:17:53 PM
தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களை இயக்கினார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். புதிய படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருக்கும் அவர் தற்போது ரஜினி பற்றி புத்தகம் எழுதுகிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறியது:எனது தந்தை பற்றிய உண்மை பதிவுகளை புத்தகமாக எழுதுகிறேன். சிறுவயதிலிருந்து அவரிடம் எனக்கு கிடைத்த அன்பு, அறிவுரை போன்றவை இதில் அடங்கி இருக்கும். இதுவொரு டைரி குறிப்பு என்றும் கூறலாம். கடந்த 5 வருடமாக எழுதி வருகிறேன். சில நண்பர்கள் படித்தபோது அவர்கள்தான் இதை புத்தகமாக வெளியிட பரிந்துரை செய்தனர். இப்புத்தகத்தில் நகைச்சுவை உணர்வும் பொதிந்திருக்கும். ஆனால் முழுமையாக அது மட்டுமே இருக்காது, ஏனென்றால் நான் நகைச்சுவையான ஆள் கிடையாது. எனக்கு தத்துவங்கள் அதிகம் பிடிக்கும். என் தந்தை நிறைய தத்துவங்களை எனக்கு விளக்கி உள்ளார். அந்த பாணியுடன் கோபம், நன்றியுணர்வு என பல தரப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இப்புத்தகம் இருக்கும்.இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.