இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது

3/23/2016 2:10:08 PM
வட மாநிலங்களை புரட்டி போட்ட பருவமழை - அசாம், பீகார், ஒடிசாவில் கடும் சேதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் - மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஆவடி: திருமண ஆசை காட்டி 11ம் வகுப்பு மாணவியை கடத்தி கோயில் முன்பு திருமணம் செய்து, வாடகை வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அரக்கோணம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தர்ராஜ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த அவரது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். சுமதியை கண்டித்ததோடு, அவரை ஆவடியில் உறவினர் வீட்டில் கடந்த வாரம் தங்க வைத்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி திடீரென சுமதி மாயமானார். இதுகுறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், சுந்தர்ராஜ்தான், சுமதியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து சுந்தர்ராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சுமதியை ஆவடி பஸ் நிலையத்தில் விட்டு விட்டு, அரக்கோணம் செல்ல ஆவடி ரயில் நிலையத்தில் சுந்தர்ராஜ் காத்திருந்தார். இதற்கிடையில், சுமதியும் தனது வீட்டுக்கு சென்றார். உடனே சுமதியை ஆவடி காவல் நிலையத்துக்கு அவரது பெற்றோர் அழைத்து வந்தனர். பின்னர் சுமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருமண ஆசைகாட்டி சுமதியை சுந்தர்ராஜ் கடத்தி சென்றதும், காஞ்சிபுரத்தில் ஒரு கோயில் முன்பு சுமதிக்கு தாலி கட்டி ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இதையடுத்து சுந்தர்ராஜை கைது செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுமதியை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் சில
  • வியாசர்பாடியில் 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்



  • விறகு கடையில் பணம் கொள்ளை



  • ராயப்பேட்டையில் போதை பொருள் விற்ற தம்பதி கைது



  • சிறுமிகளிடம் சில்மிஷம்: டிரைவர் கைது



  • சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த வாலிபர் கைது



  • கல்லல் அருகே குழந்தையுடன் மாயமான பெண் வெட்டி கொலை? - கிணற்றில் உடல்கள் மீட்பு



  • கூலி தொழிலாளி கொலை அதிமுக நிர்வாகிக்கு சிறை



  • சிறையில் தாக்கப்பட்ட விவகாரம் - மனஉளைச்சலால் தூக்கமின்றி தவிக்கும் சமூக ஆர்வலர் பியூஸ்; நள்ளிரவில் ‘அடிக்காதீங்க’ என கதறல்



  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]