இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை

3/22/2016 2:26:04 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் 35 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளான டேவிட் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நாளை குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 11 தீவிரவாதிகள் கடல்வழியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் டேவிட் ஹெட்லி என்பவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதில் ஹெட்லி முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது.

ஹெட்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க சிறையில் இருந்தபடி மும்பை கோர்ட்டில் வீடியோ கான்பரன்சிங்கில் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார். மும்பை தாக்குதலுக்கு முன்பு இந்தியா வந்ததையும், மும்பையில் நிறுவனம் ஒன்றை தொடங்கி பல இடங்களை வேவு பார்த்ததையும் ஒப்புக் கொண்டார். லஷ்கர் இ தொய்ா, ஜெய்ஷ் இ முகமது, ஹஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவும் பணமும் அளித்து வருவதாக கூறினார்.

இது தவிர குஜராத்தில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட மும்பை மாணவி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தற்கொலை படைதீவிரவாதி என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார். இந்நிலையில் எதிர் தரப்பில் ஹெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி நேற்று விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் ஹெட்லியின் வக்கீலுக்கு வேறு வேலை இருந்ததால் நேற்று குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை. நாளை ஹெட்லியிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்தரப்பு வக்கீல் அப்துல் வகாப் கான் தெரிவித்துள்ளார். ஹெட்லியிடம் 4 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சில
  • திருப்பதி கோயிலில் 7,18ல் கருட சேவை உற்சவம்



  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]