விஜய்க்கு வில்லன் ஆன மகேந்திரன்
3/22/2016 2:19:38 PM
ரஜினி நடித்த ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கிய மகேந்திரன் விஜய்யின் ‘தெறி’ படம் மூலம் நடிகராகிறார். அமைதியான சுபாவம் கொண்ட அவர் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தெறி பட ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மகேந்திரன் கூறும்போது,’இயக்குனர் அட்லி என்னை அணுகி எனது கதாபாத்திரம், கதையை சொன்னபோது அவரிடம்,’இந்த வேடத்தில் நான் நடிக்க பரிசீலிக்கப்பட்டிருப்பதுபற்றி விஜய்க்கு தெரியுமா? என்றேன்.அதுபற்றி அறிந்து விஜய் சந்தோஷம் அடைந்ததாக இயக்குனர் கூறினார். அதன்பிறகு அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. என்னை ஒரு நடிகனாக இதுவரை கற்பனை செய்துகூட பார்த்தது கிடையாது. அட்லியும், தயாரிப்பாளர் தாணுவும் நடிக்க வேண்டும் என்று என்னை தூண்டினார்கள். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்’ என்றார்.