கார்த்தி என்னை கண்டுகொள்ளவில்லை : தமன்னா பேட்டி
3/17/2016 3:36:37 PM
தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியது:தமிழில் நடித்துள்ள ‘தோழா’ திரைக்கு வரவுள்ளது. முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தாலோ அவர் நடிக்கவில்லை. என்னை தேர்வு செய்தார்கள். இது பிரெஞ்ச் படமான ‘இன்டச்சபிள்ஸ்’ படத்தின் ரீமேக் கிடையாது. அதனை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றி பலரும் கூறினார்கள். ஒரிஜினல் படத்தை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். அப்படி பார்த்தால் காட்சிகளில் அந்த கதாபாத்திரம்தான் ஞாபகத்தில் வரும்.
படப்பிடிப்பில் பங்கேற்கும்போதெல்லாம், ‘நீங்கள் பார்க்க அழகாக இருக்கிறீர்கள்’ என்று நாகார்ஜுனா என்னை பாராட்டுவார். இயக்குனர் வம்சி, நடிகர் கார்த்தி என்னை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள். ‘பாகுபலிக்கும் தோழாவுக்கும் இடையே நீண்ட இடைவெளி விட்டது ஏன்?’ என்கிறார்கள். ஒரே சாயலில் படங்கள் நடிக்க விரும்பாததுதான் காரணம். ‘பாகுபலி 2’ம் பாகத்தில் எனக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் கிடையாது. ஆனால் ‘பாகுபலி’ முதல் பாகம் என் வாழ்வில் மேஜிக் நிகழ்த்தியது.