ஆணவக் கொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்
3/17/2016 3:18:37 PM
திருவள்ளூர்: ஆணவக் கொலையை கண்டித்து திருவள்ளூரில் மக்கள் நல கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஜார் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் செயலாளர் எழிலரசன் தலைமை வகித்தார். கூட்டணி நிர்வாகிகள் கே.எம்.வேலு, டி.கஜேந்திரன், இரா.வே.யோகா, இரா.திருவரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பூவை மு.பாபு, மு.வ.சித்தார்த்தன், பன்னீர்செல்வம், ராமகிருஷ்ணன், நீலவானத்து நிலவன் ஆகியோர், உடுமலையில் நடந்த ஆணவக் கொலையை கண்டித்து பேசினர். தளபதி சுந்தர், சுந்தரராஜன், அருண்கவுதம், தமிழினியன், செல்வராஜ், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning