இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பல்லாவரம் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் தர கூடாது:அதிமுகவினர் எதிர்ப்பு

3/14/2016 3:05:16 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ தன்சிங்குக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அதிமுகவினர் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறியதாவது:கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  தன்சிங் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.அதன்பிறகு அவர் அதிமுக விழாக்களில் பங்கேற்பது மட்டுமே தனது வேலையாக இருந்தார். மேலும், அப்பகுதியில் நிறைய கோஷ்டிகளை உருவாக்குவதிலும், தன்னை எதிர்ப்பவர்களை ஓரம் கட்டுவதிலும் குறியாக இருந்தார்.மற்றபடி, அவரது தொகுதி பணிகள் அனைத்தையும் அவரது மகன்களே கவனித்து வந்தனர். கடந்த 5 ஆண்டு காலத்தில் தனது தொகுதி மேம்பாட்டுக்காக தன்சிங் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை.

தன்னை வெற்றி பெறவைத்த அதிமுக நிர்வாகிகளையும் உதாசீனப்படுத்தி வந்தார். சட்டசபையிலும் தனது தொகுதி பிரச்னைகள் குறித்து எதுவும் பேசாமல், வெறும் ‘சிட்டிங்’ எம்எல்ஏவாக மட்டுமே இருந்தார்.தொகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களை, தன்னுடைய ஆதாயம் கருதி மாற்று கட்சியினருக்கு அளித்து வந்தார்.இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தன்சிங் பணம் கட்டியிருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில், அவருக்கு பல்லாவரம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தன்சிங்கின் ஆதரவாளர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

எனவே, பல்லாவரம் தொகுதியில் தன்சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்லாவரம் தொகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், கடந்த சில நாட்களுக்கு முன் போயஸ் கார்டன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]