இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

3/14/2016 2:44:20 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : அண்மையில் 28 தமிழக மீனவர்களும், அவர்களது 4 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் பாக் ஜல சந்தியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி நடைபெற்ற சம்பவத்தின் போது 5 மீனவர்களும், அவர்களது படகும் சிறை பிடிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 12ம் தேதி 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 3 படகுககளை சிறைபிடித்துள்ளனர்.

இவர்கள் காங்கேசன் துறைமுகம் மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 13ம் தேதி நடைபெற்ற சம்பவத்தி–்ல் சிறை பிடிக்கப்பட்ட 4 படகுகள் உள்பட மொத்தம் 82 படகுகள் இலங்கை வசம் உள்ளது. இவற்றை நல்ல நிலையில் திருப்பி அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக தூதரகம் வாயிலாக மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்கள் மற்றும் 82 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]