‘தவறுகளை மன்னிக்க கூடாது’ கமல் கருத்து
3/9/2025 3:11:12 PM
‘பாபநாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த கலாபவன் மணி திடீர் மரணம் அடைந்தார். அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணியின் மறைவுக்கு கமல், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக சில தினங்களுக்கு முன் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இறந்தார். அவருக்கு வயது 41. இவரது திடீர் மரணமும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழில் வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படம் ராஜேஷ் பிள்ளை இயக்கிய ‘டிராபிக்’ மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேஷ் பிள்ளை கமலின் நெருங்கிய நண்பரும் ‘சாணக்கியா’ பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாரின் உதவியாளராக இருந்தவர். கமலிடமும் நட்புடன் பழகி வந்தார். ராஜேஷ் பிள்ளையின் மரணம் காரணம் குறித்து கூறிய கமல்,’கேஸ் நிரம்பிய குளிர் பானங்களை, உடலுக்கு பொருந்தாத உணவுகளை அதிகளவில் ராஜேஷ் பிள்ளை உட்கொண்டதுதான் அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது என்று அறிகிறேன். சிலரது தவறுகள் மன்னிக்கப்படக்கூடாது, தடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகி விடுகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.