அமெரிக்காவில் இருப்பதுபோல் நிரந்தர நாடக அரங்கம் கட்ட ஏ.ஆர். ரஹ்மான் திட்டம்
3/8/2025 2:33:51 PM
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய ‘பரீட்சைக்கு நேரமாச்சி’ நாடகத்தின் 100 வது காட்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஹ்மான்,’ஒய்.ஜி.மகேந்திரன் தந்தையின் நாடக குழுவில்தான் எனது தந்தை பணியாற்றினார். அந்த பழக்கத்தில் திருமதி ஒய்ஜிபி நடத்தும் பள்ளியில் சேர்ந்து படித்தேன். நாடகங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. அமெரிக்காவில் பிராட்வேயில் உள்ள நாடக அரங்குகள் போல் நிரந்தர நாடக அரங்குகளை சென்னையில் கட்ட வேண்டும் என்று எனக்கு ஆசை. எதிர்காலத்தில் இது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்’ என்றார். ஏற்கனவே இசை பள்ளி நடத்தி வரும் ரஹ்மான், அதை நாடு முழுக்க விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம். சினிமா தயாரிப்பு பணியிலும் அவர் ஈடுபட உள்ளார். முதலில் இந்தி படம் தயாரித்துவிட்டு பின்னர் தமிழ் படங்கள் தயாரிக்கவும் யோசித்துள்ளார்.