நித்யா மேனனை கண்ணீர் சிந்த வைத்த ஹீரோ
3/8/2025 2:33:31 PM
சித்தார்த்துடன் ‘180’ படம் மூலம் அறிமுகமானாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தார் நித்யா மேனன். மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்கு பிறகு அவர் மீது கோலிவுட் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. தற்போது சூர்யாவுடன் ‘24’, ரோகிணி இயக்கும் ‘அப்பாவின் மீசை’, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப் ஜோடியாக ‘முடிஞ்சா இவன புடி’, விக்ரம் ஜோடியாக ‘இருமுகன்’ படங்களில் நடிக்கிறார். ‘24’ படத்தில் நித்யாவின் நடிப்பு சூர்யாவை வெகுவாக கவரவே அவரை மனம் திறந்து பாராட்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த நித்யா ஆனந்த கண்ணீர் வடித்தாராம். விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.