ரம்யா-லட்சுமி மேனனை தொடர்ந்து பாடகியாக மாறிய திரிஷா
3/8/2025 2:33:09 PM
ரம்யா நம்பீஸன், லட்சுமி மேனன் இருவரும் நடிப்பதுடன் சொந்த குரலில் பாடல் பாடுகின்றனர். அவர்களைப்பார்த்து அனன்யா உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் பாட முயன்றனர். தற்போது அந்த ஆசை திரிஷாவையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் திரிஷா ஒரு பாடல் பாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அதை கவிதை வடிவில்தான் வசனம்போல் பேசி இருந்தார். பின்னர் ‘தூங்காவனம்’ படத்தில் சொந்த குரலில் வசனம் பேசினார்.
திரிஷா நடித்து வரும் ‘நாயகி’ படத்தில் அவரை பாட வைக்க முடிவு செய்தார் இயக்குனர் கோவர்தன். முதலில் தயங்கிய திரிஷா பிறகு பாடலை பாடி முடித்தார். திரிஷாவை பொறுத்தவரை தொடர்ச்சியாக 15 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் இருந்தபோதும் சொந்த குரலில் டப்பிங் பேசாமல் இருந்தார். கமல்ஹாசன்தான் அவருக்கு தனது படத்தில் பயிற்சி கொடுத்து டப்பிங் பேச வைத்தார். தற்போது பாடல் துறையிலும் நுழைந்திருக்கும் திரிஷா தனது குரலுக்கு ரசிகர்கள் எப்படி வரவேற்பு தரப்போகிறார்களோ என்ற எண்ணத்தில் பயத்துடன் காத்திருக்கிறார்.