சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள் கண்காணிப்பு
3/8/2025 2:25:20 PM
திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களை போலீசார், ‘ஷிப்ட்’ முறையில் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை ஒட்டி திருமணம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பிரியாணி மற்றும் சரக்குகள் கொடுப்பதை தடுக்க, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமண மண்டபங்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்போது, மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களை போலீசார், ‘லிஸ்ட்’ எடுத்து, ‘ஷிப்ட்’ முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் மண்டப ‘புக்கிங்’ விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.