திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
3/8/2025 2:22:32 PM
சென்னை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம், திருத்தணி நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 1வது வட்டக் கழக செயலாளர் ஆர்.பிரவீண்குமார் தனது பொறுப்பிலிருந்து விலகி கொண்டார். இதையடுத்து டி.ரகுநாதன் 1வது வட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல 21வது வட்டக் கழகச் செயலாளர் பாஸ்கர் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து எம்.தங்கராஜ் 21வது வட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த வட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.