வையாவூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்ட கலந்தாய்வு
10/8/2025 2:22:50 PM
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் வையாவூர் ஊராட்சி உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் திட்டமிடல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாலா சசிக்குமார் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், முரளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.இக்கூட்டத்தின்போது, ஊராட்சியில் 2016-17ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள பணிகளைத் தேர்ந்தெடுத்தல், ஊராட்சியில் உள்ள நலிவுற்றோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.மேலும் ஊராட்சியின் வரைபடம், காடுகளின் வரைபடம் ஆகியவை தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுவாழ்வு திட்ட நிர்வாகி கணபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.