இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் வங்கதேச உள்துறை அமைச்சர் நம்பிக்கை

9/28/2015 2:19:19 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

டாக்கா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் (அக். 9-13, அக். 17-21) கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று (28ம் தேதி) வங்கதேசம் செல்வதாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு இருக்காது என, அந்நாட்டின் வெளியுறவு வர்த்தக துறை (டிஎப்ஏடி) எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்கு கிளம்புவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுசமன் கான் கமால் கூறுகையில், ஆஸ்திரேலியா அதன் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற கவலை. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு அணிகள் இங்கு வந்து விளையாடியுள்ளன. இங்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் துப்பறியும் நிறுவனங்களிடமும் பேசி விட்டேன். எத்தகைய ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு முழு பாதுகாப்பை கொடுக்க முடியும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். வங்கதேச மக்கள் அமைதியையும், அன்பையும் விரும்புபவர்கள். அவர்கள் தீவிரவாதத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள், என்றார்.
 
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறுகையில், திட்டமிட்டபடி இந்த தொடர் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்குதான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம்,’’ என்றார். இது ஒரு பொதுவான எச்சரிக்கைதான் என்றும், இங்கு வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதனிடையே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அதிகாரி சீன் கரோல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்ய இன்று வங்கதேசம் செல்கிறார்.

மேலும் சில
  • ஷென்சென் ஓபன் டென்னிஸ்: ஆஸ்டின் கிராஜிசெக் முன்னேற்றம்



  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் பாடிய சச்சின்: அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது?



  • ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: அயோனிகாவுக்கு வெண்கலம்



  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ்: மிலாஸ் ரோனிச் சாம்பியன்



  • மும்பை ரஞ்சி அணி அறிவிப்பு



  • இந்தியா வந்தது தென் ஆப்பிரிக்கா நாளை பயிற்சி போட்டியில் மோதல்



  • இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை புறக்கணிக்க முடிவு ஐசிசி, பிசிசிஐக்கு விடுக்கும் அச்சுறுத்தலா? பாக். வாரியத்துக்கு ராஜிவ் சுக்லா கேள்வி



  • கொரிய ஓபன் டென்னிஸ் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி



  • தெ.ஆ.வை விட இந்திய பேட்டிங் வரிசை சிறப்பானது : டிவில்லியர்ஸ் பேட்டி



  • ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும்- ரவிசாஸ்திரி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]