இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மரண தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் : கருணாநிதி வலியுறுத்தல்

9/1/2025 3:01:08 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சென்னை : மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற சட்ட ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுகொள்ளவேண்டும் என்று திமுக தலைவர்  கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: இந்திய வாக்காளர்களில் பெரும்பாலானோரின்  கருத்து மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதாகும் என்று ஒரு ஆய்விலே கண்டறியப்பட்டுள்ளது.   இந்தக் கருத்தினைத் தான் தி.மு. கழகமும்  கொண்டுள்ளது.  அதைப் பற்றி நானும் பல ஆண்டுக் காலமாக வலியுறுத்தி  வருகிறேன். கடந்த 2011 ஆண்டு நான் விடுத்த அறிக்கையில், “மனித உரிமைக்கும்,   மனிதாபிமானத்திற்கும்   எதிரான  தூக்குத் தண்டனை தேவையில்லை  என்றும்,  அதனை எல்லா  நாடுகளும்  ரத்து  செய்து விடலாமென்றும் கருத்து  தெரிவிக்காதோர் யாரும் இல்லை.

உயர்ந்த பட்சத் தண்டனையான  தூக்கு தண்டனைக்குப் பதிலாக -கொலைக் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி - எஞ்சியுள்ள  வாழ்நாள் முழுவதும்  அந்தக்  குற்றத்தை எண்ணியெண்ணி  தனக்குத் தானே  வருந்துவதை விட  தூக்குத் தண்டனையால்  பெரிய  பயன் ஒன்றும் விளைந்து விடப் போவதில்லை  என்பதால்;ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்திட வேண்டும்.   கொலைக் குற்றத்தில்  ஒரு மனிதன்  ஈடுபட்டிருப்பானேயானால், அவன் அதற்காக ஆயுள்   முழுவதும் வருந்தி வாடுவது  தான்  தூக்குத் தண்டனையை விடக் கடுமையானது என்பது மட்டுமல்ல- அந்த மனிதன் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை  வழங்கி, வழி  வகுத்திடக் கூடியதுமாகும்.

மத்தியப் பேரரசுக்கு  நாம் எழுதிய  மனமுருக்கும்  கடிதங்களும் - பிரதமர் மற்றும்  இந்தியத் தலைவர்கள்  அனைவரிடமும்  நேரில்  எடுத்து வைத்த   கோரிக்கைகளும்  யாரும் அறியாதது அல்ல” என்று குறிப்பிட்டிருந்தேன். 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத்தண்டனைக்கு எதிரான ஒரு  தீர்மானத்தை முன் வைத்த போது,  அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன;  இந்தியா உட்பட 39 நாடுகள் தான் அதை எதிர்த்து வாக்களித்தன;  ஐ.நா.  தீர்மானத்தையொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன.  அந்தப் பெரும்பான்மையுடன்  இந்தியாவும்  இணைய  வேண்டாமா என்றும் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் கேட்டிருந்தேன்.

ஆனால் ஒருசிலர்,  தீவிரவாதம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் மரண தண்டனையை நீக்கி விட்டால்  குற்றச் செயல்கள் இன்னும் பெருகி விடும் என்பது,  அந்தத் தண்டனையை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது.  இந்த நிலையில் தான் மரண தண்டனை இருக்க வேண்டுமா? வேண்டாமா?  என்ற பொருள் பற்றி  ஆராய்ந்திட,  டெல்லி உயர் நீதி மன்ற முன்னாள்  தலைமை நீதிபதி ஷா அவர்கள் தலைமையில்,  ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட “சட்ட ஆணையம்”   ஒன்றினை 2014ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் பணித்தது.   மரண தண்டனை முற்றிலுமாக சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்ற என்னுடைய  வலியுறுத்தலை அடிப்படையாக வைத்து  மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர், கவிஞர் கனிமொழி அந்தக் கருத்தை இந்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம்  மூலமாகத் தெரிவித்ததோடு, அந்த ஆணையம் நடத்திய ஆலோசனையிலும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தார்.

நேற்றையதினம் இந்தச் சட்ட ஆணையம் அளித்த இறுதி அறிக்கையில், தீவிர வாதம், தேச விரோதச் செயல்கள் தொடர்பான குற்றங்களைத் தவிர்த்து பிற  குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை ரத்து செய்து விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.எனவே சட்ட ஆணையம் தற்போது செய்துள்ள பரிந்துரைகளின்  அடிப்படையில்,  மத்திய அரசு,  இந்தியாவில் அனைத்துக் குற்றங்களுக்குமே மரண தண்டனை கிடையாது என்ற முடிவினை எடுத்து,  அதற்கான அறிவிப்பினை  உடனடியாக செய்திட முன் வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]