அசாமில் கனமழை: 6 லட்சம் பேர் பாதிப்பு
8/22/2015 11:42:13 AM
சிராங்: அசாமில் பெய்த கனமழைக்கு சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகினர். 1000 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் எங்கும் வெள்ளக்காடானது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. 19 மாவட்டங்களில் சுமார் 1000 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.