இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி விழாவில் ஜீப் மோதி படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு: 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

8/21/2015 3:24:32 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரியில்   ஜீப் ேமாதியதில் காயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  திருவனந்தபுரம் காரியத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், நேற்று முன்தினம் மாலை ஓண விழா கொண்டாடப்பட்டது. பூக்கோலப்போட்டி உள்பட  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது சில மாணவர்கள் கல்லூரிக்கு ஜீப்புகளை கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் சில மாணவர்கள் ஒரு ஜீப்பை  கல்லூரி வளாகத்திற்குள் அதிவேகமாக ஓட்டி சென்றனர். அப்ேபாது கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த தன்ஷீபசீர்(20) என்ற மாணவி மீது ஜீப்  மோதியது. இதில் மாணவி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்த உடன் மாணவர்கள் ஜீப்புடன் மாயமானார்கள். உடனடியாக தன்ஷீபசீர்  திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு தன்ஷீபசீர் உயிரிழந்தார்.இதற்கிடையே நேற்று காலை மாணவி மீது மோதிய ஜீப் கல்லூரி  கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜீப்பை ஓட்டியது கண்ணூரை சேர்ந்த மாணவர் பைஜு என தெரிய வந்தது. இவர் நான்காம் ஆண்டு  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் உட்பட 12 மாணவர்கள் ஜீப்பில் இருந்தது தெரிய வந்தது. இவர்கள் 12 பேர் மீதும் காரியம் போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். பைஜு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார்  தலைமறைவான மாணவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பெண் அதிகாரி அவமதிப்பால் விவசாயி தற்கொலை: போலீசார் வழக்கு பதிவு



  • அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி



  • அசாமில் கனமழை: 6 லட்சம் பேர் பாதிப்பு



  • புனே திரைப்பட கல்லூரி விவகாரம்: மாணவர்களுடன் மத்திய குழு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்



  • ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : நடிகை ரோஜா குற்றசாட்டு



  • பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால் பேச்சு வார்த்தையை ரத்து செய்வோம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை



  • அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக



  • ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு மோடியை சந்திக்க சகோதரி விருப்பம் : ராக்கியை தபாலில் அனுப்பினார்



  • மாநிலங்களை ஏலம் விடும் பிரதமர் மோடி காங்கிரஸ் கடும் தாக்கு



  • பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் போர்க்கொடி



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]