விழிப்புணர்வு முகாம்
8/21/2015 2:12:59 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பென்னலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. பென்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் நிர்வாகி புவிராஜன் வரவேற்றார். உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்னைகள், கல்வி உதவி தொகை, கட்டாயக் கல்வி, பெண்களுக்கான உரிமைகள், அரசின் நலத்திட்டங்கள் பெறுவது, சிவில் மற்றும் கிரிமினல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது பற்றி விளக்கி பேசினார். இதில் வழக்கறிஞர்கள் பிரதாப், ரவிச்சந்திரன், ரமணன், ரேகா, அபி, தன்னார்வளர் ஜெயந்தி உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.