இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணி அமைச்சர்கள் நிர்பந்தத்தால் அதிகாரிகள் தவிப்பு

6/11/2025 2:50:02 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கோவை: தமிழக அரசின் வருவாய்துறையில் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு சமீபத்தில் நேர்காணல் நடந்தது. கோவை மாவட்டத்தில் 33 இடங்களுக்கு நேர்முக தேர்வு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. 2,400 பேர் விண்ணப்பம் செய்தனர். தவிர, பதிவுமூப்பு அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 142 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். மொத்தம் 2,542 பேர் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இதில், தகுதியில்லாத 700 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 1,842 பேருக்கு நேர்முக தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில், 1,642 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். 10 தாசில்தார் மற்றும் உதவி தாசில்தார் குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கு பணி நியமன ஆணை எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி வழங்க அமைச்சர்களிடம் இருந்து சிபாரிசு வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 33 காலியிடங்களுக்கு 2 அமைச்சர்களிடம் இருந்து 60 பேர் பெயர் கொண்ட சிபாரிசு பட்டியல் வந்துள்ளதாக கூறப்படுகிறதுஇந்த சிபாரிசு பட்டியலை ஏற்றுக்கொள்வதா? அல்லது நேர்முக தேர்வில் முறையாக பதில் அளித்த நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை அனுப்புவதா? என்ற குழப்பத்தில் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளனர்.திருநெல்வேலியில் வேளாண் துறை டிரைவர் பணியிடத்துக்கு, அமைச்சர் சிபாரிசு செய்த நபருக்கு பணி வழங்கப்படாததால், அதிகாரி கடும் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவி இழந்த அக்ரிகிருஷ்ணமூர்த்தி, கைதாகி கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்.

வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் பணி நியமனத்திலும் ஆளுங்கட்சியினர் பல லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’நேர்மையுடன், வெளிப்படையாக இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஆனால், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் சிபாரிசு பட்டியலால் இழுபறி ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்தில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுமா என்பது சந்தேகம்தான்’’ என்றார்.

மேலும் சில
  • குறுவைக்கு இன்று மேட்டூர் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை



  • மணலி மண்டலத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்



  • ராகுல்காந்தி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை



  • நன்மங்கலம் காப்பு காட்டில் குட்டையில் குளித்த மாணவன் மாயம்



  • ஆர்கே. நகர் தொகுதியில் அதிமுக அலுவலகமாக மாறிய அரசு அச்சக ஊழியர்கள் சங்கம்



  • குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறவேண்டும் : தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க மாணவிகள் வலியுறுத்தல்



  • புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டை நுழைவு வாயில்



  • ஆடல், பாடல் சுகமா.... சோகமா...!



  • ரூ. 30 செலுத்தினால் பிளாஸ்டிக் ஆதார் அட்டை



  • 2 பேரை பலி வாங்கிய கதண்டுகள் அழிப்பு



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]