ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி
5/16/2015 12:34:31 PM
ஆவடி: சென்னை, கொளத்தூர், ஜிகேஎம் காலனி, வெங்கடேஸ்வரா நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (44). திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் ராஜசேகர் விடுமுறையில் சென்னைக்கு வந்தார். இந்நிலையில், பெரம்பூர் கேரேஜ் - லோகோ ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை ராஜசேகர் தண்டவாளத்தை கடந்தார்.அப்போது, சென்னையை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று அவர்மீது வேகமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ராஜசேகர் உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்து பெரம்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, ராஜசேகரின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.