இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கூடுவாஞ்சேரியில் ரயில்வே மேம்பால பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

5/16/2015 12:33:10 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

கூடுவாஞ்சேரி: சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர், டி.டி.சி. நகர், பலராமபுரம், பள்ளஞ்சேரி, மாடம்பாக்கம், குத்தனூர், ஒரத்தூர், வள்ளலார்நகர், தைலாவரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கூடுவாஞ்சேரியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வரவேண்டும்.இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சுமார் ₹21 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக சரிவர பணி நடைபெறாமல் இருந்ததுடன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே கேட் மூடப்பட்டு விட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல ஊரப்பாக்கம் ரயில்வே கேட் வழியாக சுற்றி வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.மேலும் ரயில்வே கேட் அருகே குறுகலான சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சேற்றில் சிக்கி கீழே விழுந்து அடிபடுகின்றனர். இதனை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டம் நடத்தும்போது மட்டும் மேம்பால பணியை தொடங்குகின்றனர். அதன்பின்,  மீண்டும் பணியை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.மேலும், இப்பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பணியில் ஊழியர்கள் யாரும் இல்லை.

இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பினி பெண்கள், உடல் ஊனமுற்றோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதால், பலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது.எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், ரயில்வே கேட்டில் பாதுகாப்பு பணி ஊழியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, இதுபற்றி ரயில்வே உயரதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறினர்.

மேலும் சில
  • டாஸ்மாக் கடை அகற்றாதது ஏன்? புதுகை கலெக்டர் பதில் சொல்ல வேண்டும் : மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி ஆவேசம்



  • ஆயுத போராட்டம் வெல்லும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் கோஷத்தால் பரபரப்பு



  • மணப்பெண் மறுத்ததால் திருமணம் நின்றது : உறவுக்கார பெண்ணை மணந்தார் மாப்பிள்ளை : தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு



  • ஆவடி அருகே பரிதாபம் : ரயில் மோதி ஓட்டல் ஊழியர் பலி



  • பல்வேறு கட்சியில் இருந்து விலகி 200 பேர் புரட்சி பாரதத்தில் சேர்ந்தனர்



  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு



  • வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்



  • டெல்டாவில் ஒரு வாரமாக அடை மழை : 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம் : கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம்



  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி : பொருட்கள் விலை உயர்கிறது



  • சென்னை-கோவை இடையே கோடை சிறப்பு ரயில் இயக்கம் : இன்று முன்பதிவு துவங்கியது



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]